வேலூர்: தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக அவர் வேலூர் கொண்டு செல்லப்பபட்டு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  ஆம்பூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன்  பாதுகாப்பு பணியின் போது திடீர் நெஞ்சுவலியால்  அவதிப்பட்டார். இதையடுத்து அவர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்ல. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.