ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ‘ஆடை’. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் , அதிகமான ஆபாசம் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் மட்டுமே தரயியலும் எனத் தெரிவித்துவிட்டனர்.