சென்னை

ன்னும் ஓராண்டில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 

நேற்று தமிழ்க தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்), தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்தும் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளரான பாலிகேப் என்ற நிறுவனம்இடையே சேவை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம்,

“பாரத் நெட் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டமாகும். இந்த திட்ட, டான்பி நெட் நிறுவனம் மூலம் ரூ.1,815.32 கோடியில் இத்திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  தற்போது நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பாரத் நெட் திட்டத்தின் ஒரு பேக்கேஜ் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த் திட்டம் ‘ஏ, பி, சி, டி’ என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. ஏற்கெனவே ‘சி’ ‘டி’ என 2 ‘பேக்கேஜ்’களுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தற்போது ‘ஏ’ பேக்கேஜ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வந்தவுடன் ‘பி’ பேக்கேஜும் நிறைவேற்றப்படும்.

இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதியை தடையின்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டம் வெற்றிகரமாக அமையும்.   தற்போது பாலிகேப் நிறுவனத்துடன் இன்று ரூ.509 கோடி மதிப்பிலான ‘ஏ’ பேக்கேஜுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளாக இ-சேவை மையங்கள் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆட்சியில் 56 புதிய சேவைகள், அம் மையங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல புதிய இடங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  அங்கு தனியார் விண்ணப்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.” 

எனத் தெரிவித்துள்ளார்.