சென்னை

மிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஜூன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன.  கடும் கோடை காரணமாக பள்ளிகள் சற்று தாமதாக திறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.   இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், “பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவி பெரும் மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-20  ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி 03.06.2019 அன்று அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்பட வேண்டும்.

இவ்விவரத்தை தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனதெரிவிக்கப்பட்டுள்ளது.