சென்னை:

நாளை பகலில்  4 மணி நேரம் சென்னை டூ அரக்கோணம் வரை செல்லும் அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு  ரயில்வே அறிவித்து உள்ளது.

ரயில்வே நிர்வாகம் வார விடுமுறை நாட்களில் ரயில் தண்டவாளம் உள்பட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவைகளை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி, நாளை புறநகர் ரயில் சேவை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை உள்ள பகுதிகளில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்   நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து  புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.