சென்னை

இன்று பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.    அதையொட்டி கல்வி நிலையங்கள் விடுமுறையா இல்லையா என்பது பல பெற்றோர்களுக்கு கேள்விக் குறியாக இருந்தது.   தற்போது சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள  அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொன்னேரி அரசு கலைக்கல்லூரிக்கு மட்டும் விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.