சென்னை:
ழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான அனைத்து கோப்புகளையும் 2021 ஜனவரி 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பியுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவாளி எஸ். நளினி தரப்பு வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் வாதிடுகையில், 2018ஆம் ஆண்டு ஏழு கைதிகளையும் விடுதலை செய்வதற்கான அமைச்சரவைப் பரிந்துரையை ஏற்காமல், குடியரசுத் தலைவரிடம் இந்த விவகாரத்தை அனுப்பியதன் மூலம் ஆளுநர் அவமதிப்பு செய்துள்ளார்.