திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்ச்சைக் கருத்துக்கு திமுக செய்தித்தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

“அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிட மாடல்.

எந்தவித வரலாற்று அறிவும், புரிதலும் இல்லாத மனியர் யார் என்றால் நம்முடைய ஆளுநர்தான்.

காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். எதிர்க்கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் மத்திய காவல்துறையை பயன்படுத்தி அமைச்சர்கள், மற்றவர்களையெல்லாம் சோதனை செய்து கைது செய்கிறது. ஆளுநரே சான்றிதழ் கொடுப்பதை வரவேற்கிறேன். மத்திய அரசின் செயல்பாடுகளை பற்றி ஆளுநர் குறை சொல்கிறார் என கருதுகிறேன்”

என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.