பாலிவுட் முன்னணி நட்சத்திர தம்பதி ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 7:30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்-டிற்கு இன்று மதியம் 12:05 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனையில் ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் தாயார் சோனி ரஸ்தான் மற்றும் ரன்பீரின் தாயார் நீத்து கபூர் ஆகியோர் உள்ளனர்.

ஆலியா பட்-டிற்கு குழந்தை பிறந்தது பற்றி தெரிவித்துள்ள இவர்கள் குழந்தை நல்ல ஆரோகியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆலியா பட் – ரன்பீர் கபூர் இருவருக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி மும்பையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இவர்களுக்கு இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.