இன்று காலை 10.45 மணி அளவில் தனது கிரீன்வேஸ் சாலை வீட்டில் பேட்டி அளித்த ஓ.பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தார் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன்,

அவரும் முதல்வருடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சசிகலா குடும்பத்தினருக்கு பணம்தான் முக்கியம் என்று கூறினார்.

மேலும்,  மிடாஸ் எனப்படும் சாராய ஆலையை நடத்திக்கொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்கட்டு நடத்த காரணமாக இருந்த பன்னீர் செல்வத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார்.

மறைந்த தமிழக முதல்வர், தவறான மருந்து காரணமாக மரணம் அடைந்தார்.  டாக்டர் சிவகுமார் என்பவர் கொடுத்த தவறான மருந்துதான் ஜெ. சாவுக்கு காரணமா என்று கூறினார்.  இதுகுறித்து இந்தியா டுடே  இன்று மாலை தகவல் வெளியிடும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்..