ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அக்‌ஷய் குமார், பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்தில் முடித்து விட்டு வந்து விட்டார். இப்போது அடுத்த படத்தில் பிஸி ஆகி விட்டார்.

அக்‌ஷய் குமார் அடுத்து நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” சில நாட்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது. அக்‌ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர்.

முறைப்படி ஷுட்டிங் மும்பையில் நேற்று தொடங்கியது.

அபிஷேக் சர்மா இயக்கும் இந்த படத்தில் ஜாக்குலின், நசரத் ஆகியோரும் நடிக்கிறார்கள்

வெள்ளைக்கண்ணாடி அணிந்து, தலைமுடி காற்றில் பறக்க, இந்த படத்தில் தனது தோற்றத்தை அக்‌ஷய்குமார், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

“எனது தோற்றம் நன்றாக உள்ளதா?” என ரசிகர்களிடம் அக்‌ஷய் குமார் கருத்து கேட்டுள்ளார்.

ராம்சேது படத்தில் அவர் தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார்.

– பா. பாரதி