க்னோ

மாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் யோக்கியமான ஆட்சிதான் வேண்டும் எனக் கூறி உள்ளார்.

வரும் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தருணத்தில் பலர் கட்சி மாறி வருகின்றனர்.  அவ்வகையில் நேற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் குஸ்வாகா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ரானா உள்ளிட்டோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

அப்போது அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது உபி.யில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். அதையே சமாஜ்வாடி கட்சியும் விரும்புகிறது.

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தாண்டி விட்டது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி 400 இடங்களில் வெற்றி பெறும்.

உத்தர பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய அரசும் விவசாயிகள் விரோத ஆட்சி நடத்தி வருகின்றன. அவர்கள் பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர்   நாட்டில் வேலைவாய்ப்பு என்பதே அடியோடு இல்லை. உத்தர பிரதேச மக்கள் யோக்கியமான ஆட்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்; யோகியை அல்ல. ” எனத் தெரிவித்தார்.