இந்திய அரசியல் தலைவர்களில் நேர்மையானவர் என்று கட்சிகளைக் கடந்து பெயரெடுத்தவர் ஏ.கே. அந்தோணி.

தனது 52 கால தேசிய அரசியலுக்கு ஓய்வு கொடுத்து நாளை தனது சொந்த மாநிலமான கேரளா செல்ல இருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோணி, “காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை வேதனை அளிப்பதாக இருந்தாலும் தேசிய அளவில் பலம் பொருந்திய கட்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது” என்று கூறினார்.

நாளை கேரளா செல்ல இருக்கும் நிலையில் 81 வயதான தனது தந்தை ஏ.கே. அந்தோணியுடனான இந்த முக்கிய தருணம் குறித்த புகைப்படங்களை அவரது மகன் அனில் அந்தோணி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.