அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது.

நேற்று ரிலீசான இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் 540 திரையரங்குகளில் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாரிசு 430 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அஜித் படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடும் உரிமையையும் விஜய் படத்தை சென்னை, செங்கை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் திரையிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கியது.

நேற்று ஒரே நாளில் துணிவு படத்தின் மொத்த வசூல் 21.5 கோடி ரூபாய் வசூலானதாகக் கூறப்படுகிறது.

அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் துணிவு படம் திரையிடப்பட்ட நிலையில் அந்தப் படம் 24.59 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விஜய்-யின் வாரிசு திரைப்படம் 19.43 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதுந்தபோதும் முதல் நாள் கலெக்சனில் அஜித் நடித்த துணிவு படம் சாதனை படைத்திருப்பதாகவே பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.