சென்னை

ளுநர் மாளிகையில் பத்ம விருது வென்ற தமிழகத்தை சென்ற்ந்த 13 பேருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு அஜீத் மற்றும்  அஸ்வின் வரவில்லை.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நாட்டின்ன் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.  இந்த விருது பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது.

கடந்த 25 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவற்றில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

நேற்று பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும், கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த பாராட்டு விழாவில் பத்ம விருதுக்கு தேர்வான நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவர்னரின் பங்கேற்கவில்லை.  அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் அஸ்வினும் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.