சென்னை

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி பயோ காஸ் நிறுவனத்தில் நேற்றிரவு வாயுக் கசிவு ஏற்பட்டு 2 பேருக்கு காயம்  ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பயோ காஸ் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டது  அப்போது சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். கரும் புகை முட்டம் ஏற்ட்டதால் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இடையொட்டி அந்த பகுதியை சுற்றியுள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம் கேட்டது. தகவல் கிடைத்து நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

காஸ் கசிவால் மயக்கம் அடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திடீரென்று நள்ளிரவில் வாயுக் கசிவு ஏற்பட்டு, பொது மக்கள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.