ஜனவரி மாதம் நடிகர் தனுஷுடம் இருந்து பிரிந்து வாழப்போவதாக அறிவித்த ஐஸ்வர்யா கடந்த இரண்டு மாதங்களாக தனது பெயருக்குப் பின் ஐஸ்வர்யா தனுஷ் என்ற அடையாளத்துடனேயே சமூக வலைதளத்தில் தொடர்ந்து வந்தார்.

சமீபத்தில் வெளியான அவரது பயணி இசை ஆல்பத்தில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று முதல் தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஐஸ்வர்யா தனுஷ் என்ற அடையாளத்தை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார்.

உலக கவிதை தினமான நேற்று தனது மகன்களுக்காக ட்விட்டரில் கவிதை ஒன்றையும் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதில் :

என் வயிற்றில் இருக்கும்போது என்னை உதைத்தீர்கள்
இப்போது நீங்கள் வளர்ந்த பின் என்னை முத்தமிடுகிறீர்கள்
உங்கள் இருவரையும் மகன்களாக பெற்றதற்கு,
நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
நான் திருப்பிச் செலுத்தும் ஒரே வழி பிரார்த்தனை
இந்த அன்பை உங்களால் அளவிட முடியாது
ஆனால் உங்களை வளர்த்து, நீங்கள் வளர்வதைப் பார்த்து மகன்களை என்றென்றும் பொக்கிஷமாக வைப்பேன்

என்று கவிதையாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.