உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது.

ஊரடங்கு உத்தரவின் பேரில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் . இதனால் திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் நேரத்தி போக்கி கொண்டுள்ளனர் .

அந்த வகையில் மணிரத்னம் பதிலளிப்பார் என சுஹாசினி சமீபத்தில் ஒரு செல்போன் என்னை குடுத்து ரசிகர்களை கேள்வி கேட்க சொன்னார் .

இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் மாதவன், குஷ்பு, அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் மணிரத்னத்திடம் கேள்விகள் எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், “நடிக்கும் ஆசை வந்திருக்கிறதா? உங்கள் நண்பர்கள் யாரும் நடிக்கக் கேட்டதில்லையா?” என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு “ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கச் சொல்லிக் கேட்டார். நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

ஏனென்றால் நான் நடித்துவிட்டு மீண்டும் இயக்கச் சென்றால், என்னிடம் நடிக்கும் நடிகர்கள், நான் தான் நீங்கள் நடித்த அழகைப் பார்த்தேனே என்று என்னை ஏளனம் செய்தால் என்ன செய்ய? இப்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நடிக்காமல் இருப்பது நல்லது” என்று பதிலளித்தார் மணிரத்னம்.