சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 17ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 18ந்தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.மேலும்,  எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதிவியிலிருந்து ஓபிஎஸ்சை  நீக்குவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.