சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர்.

அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் பொறுப்புக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 அன்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 19, 21 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதிமுகவின் ஐந்தாம் கட்ட உட்கட்சித் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறுகிறது.

புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தல்: விண்ணப்ப கட்டணம் விவரம் ….