சென்னை:
திமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் இன்று வெளியாகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016-ல் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கட்டுப்படுத்தும் என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

மேலும், அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடவும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து, சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி ஸ்ரீதேவி தவிர்க்க இயலாத காரணத்தால் விடுமுறை என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.