சென்னை,

ரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைறும் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவில் புதுச்சேரி எம்எல்ஏக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து, தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக இன்று பொதுக்குழுவை கூட்டி உள்ளது.

இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர். ஆனால், புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஒருவரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

தொடக்கத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த  புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள், கடலூரில்  நடைபெற்ற  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது அவருக்கு  பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

இந்நிலையில், தற்போது எடப்பாடி அணியினர் கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு இவர்கள் செல்லாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் தானாக வரவில்லையா அல்லது டிடிவி தரப்பினரால் கடத்தப்பட்டார்களா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.