சென்னை: தமிழ்க முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தன் மனைவி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் & முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலம் பாதிப்பு காரணமாக, சென்னை ஒஎம்ஆர் சாலை பெருங்குடியில் உள்ள  ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை  அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இதுகுறித்து ஜெம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்; இன்று அவர் வீடு திரும்ப இருந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டது, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 6.45 மணிக்கு உயிரிழந்தார்” என கூறியுள்ளது.