டோக்கியோ: உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப்  முதுகில் தூக்கிச்சென்ற காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 54 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.  இதுவரை இந்தியாவுக்கு  2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற  உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியை  மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்று 2வது முறையிக ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் கலந்துகொண்ட தங்கவேலு மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப், தனது முதுகில் தூக்கிக்கொண்டு,  விளையாட்டு மைதானம் கேலரியில் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுவன்றோ மனிதாபிமானம்…