சென்னை: 
நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதையடுத்து 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம் உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
இந்நிலையில், நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ’க.அன்பழகன் மாளிகை’ எனப் பெயர் சூட்டுவதா? என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.