சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்க மற்றும் பராமரிக்க 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ₹50 லட்சம் ஒதுக்கீடு

10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு:

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி இயக்கம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மறுகட்டமைப்பு; 27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு.

அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிப்பு.

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்

காவிரி கடைமடைக்கு பாசன நீர்:

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; பயன்பெறும் நிலப்பரப்பு : 1,32,000 ஏக்கர்.

வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்திப் பராமரிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.

நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ₹450 கோடி ஒதுக்கீடு -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை.

பன மேம்பாட்டுத் திட்டம்; பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.

உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

டிரகன் ப்ரூட், அவகேடா, லிச்சி பழங்களை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

1000 ஹெக்டேரில், பேரீட்சை, அத்தி பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி – ரூ.2 கோடி ஒதுக்கீடு.

ஒவ்வொரு கிராமத்திலும் 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச் செடி தொகுப்பு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி 

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு, நமது மாநிலத்தில் அதை பின்பற்றும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரு.3 கோடி ஒதுக்கீடு.

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்