இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சியை தொடங்க முடிவெடுத்தார். இதற்கான அறிவிப்பை வரும் 14-ம் தேதி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்ஏசி ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்தபோது, விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சி தொடங்குவதாக எஸ்ஏசி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இதுதொடர்பாக விஜய் தரப்பினர் கூறியபோது, ‘‘எஸ்ஏசியும், விஜய்யும் சந்தித்து 6 மாதங்கள் ஆகின்றன. அவர் தொடங்க உள்ள புதிய கட்சிக்கும், விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் தேவையில்லாத வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கூறியுள்ளனர் .