சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

உடல்நலம் பாதிப்பு காரணமாக, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் லண்டன் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவர் வெளிநாடு செல்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவர், கடந்த ஆண்டு அப்போல்லோவில்  பொதுவான உடல்நலப் பரிசோதனை செய்துகொண்டார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்றதுமுதல் தொடர்ந்து, ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில் இன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று உடல்நலப் பரிசோதனை மேற்கொண்டார். ஒருசில மேணி நேரத்திற்குள் அவரது பரிசோதனைகள் முடிவடைந்து, வீடு திரும்பியதாகவும், ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.