டில்லி

ந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக உறவைத் துண்டித்து ஆப்கானிஸ்தான் தூதரகத்தையும் மூடியுள்ளன.

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது. இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

இந்தியா தூதரக செயல்பாடுகளுக்கு உதவவில்லை என்பதால் டெல்லியில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தூதரகம் மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் வாழும் ஆப்கானிஸ்தான் நாட்டினர் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.