”அ.தி.மு.க.  அழிந்து போகாது’’ – திருநாவுக்கரசர் அதிரடி கருத்து..

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பி.யுமான எஸ். திருநாவுக்கரசர், வரும் 13 ஆம் தேதி தனது 71 –வயது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.

இந்த நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து திருநாவுக்கரசர் அளித்துள்ள பேட்டியில் இருந்து ஒரு பகுதி

‘’எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க.வேறு… இப்போதுள்ள அ.தி.மு.க.வேறு. கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் செல்வாக்கு மிக்க தலைவர் , அ.தி.மு.க.வில். இப்போது இல்லை.

இன்னும் ஒன்பது மாதத்தில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சட்டசபைத் தேர்தலில் தோற்றாலும்  அ.தி.மு.க.அழிந்து விடாது என்பது எனது  கணிப்பு தமிழகம் முழுவதும் அந்த கட்சிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளதால், களத்தில் அ.தி.மு.க.இருக்கும். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ,அந்த கட்சியின் வலிமை தெரியவரும்.

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே கருதுகிறேன். இந்த கூட்டணி நீடித்தால் தேர்தலில் மாபெரும் வெற்றி பெரும்’’ என்று மனம் திறந்துள்ளார், திருநாவுக்கரசர்.

-பா.பாரதி.