ராணிப்பேட்டை

அதிமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி மாநிலம் எங்கும் அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக சார்பில் திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக அணியில் அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.   ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வாலாஜா பகுதியில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான முகமதுஜான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது முகமது ஜான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.  முகமது ஜான் திடீர் மரணம் அடைந்தது அதிமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,