சென்னை:

டைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள்  இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு  சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி மற்றும் மே மாதம் 19 தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக13 இடங்களிலும், அ. தி.மு.க.வும், 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், வெற்றி பெற்ற  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர்.