சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்

இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்துள்ளனர்.    அந்த நிர்வாகிகளில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோரும் அடங்குவர்.

அப்போது அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், சட்டம், ஒழுங்கு சீர் குலைவு போன்ற விவரங்கள் தொடர்பாக மனுவை அளித்துள்ளனர்.   அந்த மனுவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியைத் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரிக்கை விடுத்தனர்.

அதிமுக மூத்த நிர்வாகிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.  இதைத்தவிர முறைகேடாக ரூ.30000 கோடி சேர்ந்ததாக வெளியான ஆடியோ குறித்த விசாரணைக்கு உத்தரவிடுமாறும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் ஆர் என் ரவியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.