சென்னை

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது

இந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்ப்படுகிறது.  அத்துடன் சசிகலாவின் ஆடியோ குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.