டிகை வனிதா பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண் டார். இது வனிதாவின் 3வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து மனக்கசப்பு காரணமாக அவர் களை விவாகரத்து செய்தார். வனிதா 3வது திருமணம் பற்றி நடிகைகள் லட்சுமி ராமகிருஷணன், கஸ்தூரி ஆகியோர் கடுமையாக விமர்சித்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் வனிதா. அதேபோல் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வனிதாவை கடுமையாக விமர் சித்தார். அவருக்கும் பதில் அளித்தார்.

தற்போது பெண் ஒருவர் வனிதாவின் திருமணத்தை விமர்சித்து சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதைக்கண்டு கோபம் அடைந்த வனிதா போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில் தனது திருமணம் பற்றியும் தன்னைப் பற்றியும் அவதூறாக வலைதளங்களில் பேசுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுபதாக போலீசார் தெரிவித்திருக் கின்றனர்.