காவிரி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிதை:

கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று . 
கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று . 
மண்டைப் பிளக்கும் வெயிலில் உழுபவன் 
தொண்டை நனைக்க நீர்க்கு அழுபவன்
சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும் 
கெண்டைக்கால் பற்றி கெஞ்சியே கேட்டாலும்
அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை…
அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை – ஆனால் 
காற்றும் மழையும் கொடுக்கும்.
வேண்டும் வளத்தை அளிக்கும்.
ஆண்டவன் அளப்பதையேனும் காத்திடுவோம்.
கள்ளுக்கும் குடுவைக்கும் 
காவிரியை கழிக்காமல் 
மண்ணுக்கு ஆசைப்பட்டு
பெண்ணை சீரழிக்காமல் 
நீருயர நெல்லுயுர 
நீதியுடன் நாம் நடப்போம்.