பிரம்மபுத்ரா நதியின் அழகில் மயங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி தான் சூரியனை முத்தமிட்டதாக பதிவிட்டுள்ளார்.

90 களில் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி.

திருமணத்திற்குப் பின் திரைத்துறையில் இருந்து சற்று விலகி இருந்த கஸ்தூரி, 2010 ல் வெளியான ‘தமிழ் படம்’ த்தில் இடம்பெற்ற குத்துவிளக்கு பாடல் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு எதிர்ப்பையும் ஆதரவையும் ஒரு சேர பெற்றுவருவது இவரது வாடிக்கை.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு கருத்தும் பதிவிடாமல் உள்ள கஸ்தூரி, தற்போது அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அங்குள்ள பிரம்மபுத்திரா நதி கரையில் சென்று அதன் அழகில் மயங்கிய கஸ்தூரி அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களையும் மகிழ்வித்திருக்கிறார்.