எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பான எந்திரன் 2 பாய்ண்ட் ஓ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இப்போது ஒரு தககவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கர் இந்த படத்தின் ரகசியங்கள் காக்க இந்த படத்தின் படபிடிப்பில் யாரும் மொபைல் போன் உபயோகப்படுத்த கூடாது என்று கூறினாராம்.
இதனால் ரஜினி உட்பட யாரும் மொபையில் உபயோகிக்காமல் இருந்தனர். இதனால் விஜய் ரஜினியை சந்தித்த போது கூட ஷங்கர் கேட்டுக்கொண்டதால் புகைப்படம் எடுக்காமல் விட்டனர். ஆனால் இத்திரைப்படத்தின் நடிகை எமி ஜாக்சனின் கையில் இருந்த போனை பார்த்த ஷங்கர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அந்த போனை பார்த்த ஷங்கர் அதில் படப்பிடிப்பின் நிறைய புகைப்படங்கள் இருந்ததை பார்த்து அவரை சரமாறியாக வருத்தெடுத்துள்ளார் அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை அவரின் முன்னிலையிலேயே எமி அழித்துள்ளாராம்…