நடிகர் சூர்யா சமீபத்தில் அரசின் கல்வி கொள்கை, நீட் தேர்வு மற்றும் மூன்று வயதில் மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது ! என் குழந்தைக்கு கூட அது கஷ்டம் தான் என சூர்யா பேசியிருந்தார். அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து வரும் நிலையில்

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சூர்யாவிற்கு நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வாக்களித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. அது எல்லோருக்கும் நடந்துள்ளது. அது போலவே சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும். என்று அவர் கூறினார்.