சென்னை:

சிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து,  விஜய்சேதுபதி சார்பில் அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் ரூ5 லட்சத்திற் கான காசோலையை கோமதி மாரிமுத்துவிடன் அவரது வீட்டிற்கு சென்று நேரில் வழங்கினர்.

தோகாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார். கோமதி மாரிமுத்து திருச்சியை சேர்ந்த முடிகண்டம் பகுதியை சேர்ந்தவர். போட்டியின்போது  மின்னல் வேகத்தில் ஓடிய கோமதி, சக வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி பந்தய இலக்கை  2 நிமிடம் 2.70 விநாடிகளில்  முதலிடம் பிடித்தார்.

அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும், வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அவருக்கு பரிசு தொகைகளும் குவிந்து வருகின்றன. ஏற்கனவே திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அமுமுக சார்பிலும் ரூ.10 லட்சம் , தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், பிரபல நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கினார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம்பரிசு வழங்கி உள்ளார்.