சென்னை

னது அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் தனது அரசியல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவருடைய அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஜூன் மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மேலும் நடிகர் விஜய் ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

நடிகர் விஜய் ஓட்டுக்குப் பணம் வாங்குவது குறித்துப் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும்  களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.