சென்னை

மிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

  

மத்திய அரசு நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்..

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் ,

“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்”  

என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.