பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழத்தியது. நடிகரின் தற்கொலை குறித்து மும்பை பாந்த்ரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட தயாரிப்பா ளர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை ரியா உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்கொலை பற்றி கருத்து சொன்ன நடிகை கங்கனா ரனாவத்தை விசாரணைக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த படம் தில் பெச்சாரா. இப்படத்தில் ஹீரோயினாக சஞ்சனா சங்கி நடித்துள் ளார். படத்தை முகேஷ் சாப்ரா இயக்கு கிறார். ஏற்கனவே இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இன்று (ஜூலை 24) டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியிடப்படுகிறது.
மறைந்த நடிகர் சுஷாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் இன்று இரவு 7:30 மணி முதல் ‘தில் பெச்சாரா ‘ படத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கு கிறது என்று அறிவிக் கப்பட்டிருக்கிறது. “ஒவ்வொரு பெண் ணும் விரும்பும் ஒரு அழகான பையன். நாளை (இரவு 7:30 மணி முதல்) #DilBechara ஸ்ட்ரீமிங்கில் அவர் களின் அழகான விளையாட்டை பாருங் கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு காதலையும் ஏற்படுத்திக் சுஷாந்த்தின் வித்தியாசமான நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.