நடிகர் சூர்யா தான் நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார்.
மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு சமைத்து சாப்பிட வழியின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு மத்திய உணவினை அவர்களின் இருப்பிடம் சென்று தருகின்ற முயற்சியாக தொடங்கப்பட்டது ‘அன்ன வாசல்’.
தற்போது கொரோனா லாக்டவுனால் உணவு இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் நடைபெற்றுவரும் அன்னவாசல் திட்டத்திற்கு 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார் சூர்யா.