பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்ஜாரி விஜய் (38) டூவீலரில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். மூளைச்சாவு அடைந்து பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட இருக்கின்றன.

கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.