சென்னை

பிரபல நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கி வேலூர் தொகுதியில் பலாப்பழச் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டது தெரிந்ததே..

இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் சந்தித்துப் பேசினார். ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

இது குறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம்,

”நான் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்குக் கடிதம் கொடுத்துள்ளேன். நான் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். தற்போது மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். 

மேலும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன். எனது ஆசை எல்லாம் பிரதமர் மோடியை ஒரு சாதாரணக் குடிமகனாக கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும்”. 

என்று தெரிவித்துள்ளர்.