மார்ச் 2017 ஆம் ஆண்டு டேனி மாஸ்டர்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பெண்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து ‘தி ரேன்ச்’ என்ற தொடரிலிருந்து டேனி மாஸ்டர்சனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் தற்போது டேனி மாஸ்டர்சன் மீது 3 பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.