பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.

2020 ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து வெற்றிபெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி (Lal Bahadur Shastri National Academy of Administration) பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முசோரியில் பயிற்சி முடிந்த பிறகு வெளி மாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தவர்களில் 12 பேர் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி சப் கலெக்டராக பணியாற்றிவந்தார்.

தற்போது திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிறுவயது முதலே தந்தையின் தூண்டுதலால் படிப்பில் ஆர்வம் காட்டி வந்த ஸ்ருதன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக தனது பணியை துவங்கி இருப்பது குறித்து சின்னி ஜெயந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.