சென்னை:
ட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் இன்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாரம்பரிய கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன என்றும், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.