சென்னை: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக தவறு செய்யும் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதும், பின்னர் அவர்கள் வேறு இடங்களுக்கும் மாற்றலாகி செல்வதும் வாடிக்கையாகி வருவதால், அதிகாரிகள் தவறு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் மீதான பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக் கோரி, போக்குவரத்துக் கழகம், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரிடம் கோப்புகளை அனுப்பியது. அதற்கு, முறையான ஆவணங்கள் இல்லை  அவர் கையெத்திட மறுத்த நிலையில், போக்குவரத்த துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவாகரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனது உத்தரவில், போக்குவரத்து கழகங்களில் தவறிழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக நடவடிக்கை எடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.